உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம்

Published On 2022-12-10 07:35 GMT   |   Update On 2022-12-10 07:35 GMT
  • பெரியார் பஸ் நிலைய சிக்னலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
  • போக்குவரத்து போலீசார் அலட்சியத்தால் இந்த விபரீதம் நடந்தது.

மதுரை

மதுரை அம்பலத்தாடியை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது 45). சம்பவத்தன்று இரவு இவர் பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்தார். பெரியார் மேம்பால சிக்னலை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சுப்புராமன் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் முன்பு போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது வழக்கம்.

அவர்களுக்கு மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் (நேதாஜி ரோடு), கட்டபொம்மன் சிலை அருகில் பிரத்யேக பூத்துகள் அமைத்து தரப்பட்டது. ஆனால் போலீசார் 24 மணி நேரமும் பூத்துக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டி ருக்கின்றனர்.

பெரியார் மேம்பால சிக்ன லில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை. பெரியார் மேம்பாலத்தில் சிக்னலின்றி வாகனங்கள் இடதுபுறம் செல்ல தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வாகனங்கள் அத்துமீறி செல்கின்றன.

இதனை போக்குவரத்து போலீசார் கவனிப்ப தில்லை. அதேபோல் பெரி யார் மேம்பாலத்தில் போக்கு வரத்து சிக்னல்களை வாகன ஓட்டிகள் மதிப்பதும் இல்லை.

இதன் காரணமாக அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து உயரதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி பெரி யார் மேம்பாலத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதி முறைகளை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோன்று காள வாசல் சிக்னலிலும் போலீசார் பெரும்பாலும் பூத்துக்குள்ளேயே உட்கார்ந்துள்ளனர். தானி யங்கி சிக்னல் என்பதால் போலீசார் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்த முன்வருவதில்லை. தானியங்கி சிக்னல் காரணமாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து சென்று விடுவார்கள் என்ற அலட்சிய போக்கு போலீசாருக்கு உள்ளது.

சாலை சந்திப்பில் நின்று போக்குவரத்தை போலீசார் ஒழுங்கு படுத்தினால்தான் வாகன ஓட்டிகளும் சீராக சென்று வருவார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். காளவாசல் சிக்னல் பகுதியிலும் போலீசார் சாலையில் நின்று போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News