உள்ளூர் செய்திகள்

தெற்கு ெரயில்வே தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் பொறுப்பேற்பு

Published On 2023-08-08 08:29 GMT   |   Update On 2023-08-08 08:29 GMT
  • தெற்கு ெரயில்வே தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் பொறுப்பேற்றார்.
  • பல்வேறு பயிற்சிகளை பெற்றுள்ளார்.

மதுரை

தெற்கு ெரயில்வே முதன்மை தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1989-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரியான ஸ்ரீகுமார் மெட்ராஸ் ஐ.ஐ.டி, காரக்பூரில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தெற்கு ெரயில்வே மற்றும் தென்மேற்கு ெரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.

முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளராக சேர்வதற்கு முன்பு, பிலாஸ்பூ ரில் உள்ள தென்கிழக்கு மத்திய ெரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக இருந்தார். அதற்கு முன், தெற்கு ெரயில்வேயின் தலைமை போக்குவரத்து திட்ட மேலாளராகவும், தெற்கு ெரயில்வேயின் தலைமை சரக்கு போக்குவரத்து மேலாளராகவும், தென் மண்டலத்தின் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் தலைமை பொது மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

ஜெர்மனியின் ஹாம்பர்க் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து, பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமு கத்தில் சரக்கு போக்குவரத்து குறித்த பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News