உள்ளூர் செய்திகள்

வைகை இலக்கிய திருவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசிய காட்சி.

ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்தது ஏற்கத்தக்கதல்ல-கவிஞர் வைரமுத்து பேட்டி

Published On 2023-03-27 08:49 GMT   |   Update On 2023-03-27 08:49 GMT
  • ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்தது ஏற்கத்தக்கதல்ல என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.
  • மதுரையில் நடந்த வைகை இலக்கிய திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

மதுரை

மதுரையில் இன்று வைகை இலக்கிய திருவிழா நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பாலை கடைந்தால் வெண்ணை வரும். தமிழை கடைந்தால் தமிழர்கள் வருவார்கள். கூடல்நகரம் வரலாற்று சிறப்பு மிகுந்த நகரம். பொன் நகரம். இது தமிழனின் அடையாளம்.

மதுரையை தாமரைப்பூ வுடன் ஒப்பிடு வார்கள். இது உலகை ஈன்ற மண். நான் இந்த மதுரை மண்ணில் பிறந்தேன் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை உண்டு. தமிழை நம்பு, அது உன்னை எப்போதும் கைவிடாது. மற்ற மொழிகளுடன் உங்களின் உறவு என்பது வயிற்று உறவாக இருக்க வேண்டும். ஆனால் தமிழுடன் நீங்கள் கொண்டு உள்ள உறவு தொப்புள் கொடி உறவாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து வைரமுத்து நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏற்கத்தக்கதல்ல. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன். எதிரியை களமாட விட வேண்டும். அதுதான் ஒரு போர் வீரனுக்கு அழகு. எதிராளிவுடன் நேருக்கு நேர் மோதி வெல்ல வேண்டும். அதனை விடுத்து எதிரியின் வாளை பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. எதிராளிக்கான களம் மறுக்கப்படக்கூடாது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News