உள்ளூர் செய்திகள்

கிராமிய கலைஞர்களின் பேரணியை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்பட பலர் கண்டுகளித்தனர்.

தமிழகத்தில் கிராமிய கலைகளை மீட்டெடுப்போம்-அமைச்சர் மனோ தங்கராஜ்

Published On 2023-04-03 14:08 IST   |   Update On 2023-04-03 14:08:00 IST
  • தமிழகத்தில் கிராமிய கலைகளை மீட்டெடுப்போம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
  • கிராமிய கலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும்.

மதுரை

தமிழ்நாடு கிராமிய கலைஞர் மற்றும் கலைத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 25-ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது.

இதில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் விஜயா தாயன்பன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மாநில தலைவர் சோமசுந்தரம், தென்னக பண்பாட்டு மையம் இயக்கு னர் கோபாலகிருஷ்ணன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிராமிய கலைஞர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், நையாண்டி மேளம், கட்டை கால் ஆட்டம், நாதஸ்வரம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஆடியபடி பேரணியாக வந்தனர். இதனை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அனீஸ்சேகர், பூச்சி முருகன் ஆகியோர் தனி மேடையில் அமர்ந்து கண்டு ரசித்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக பண்பாட்டில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக கிராமிய கலைகள் திகழ்ந்து வருகின்றன.

பொதுவான கருத்துக்களை மற்றவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறும் வல்லமை கிராமிய கலைகளுக்கு உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த கிராமிய கலைகளை பாது காக்க வேண்டியது நமது கடமை ஆகும்.

இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றை மீட்டெ டுக்கும் விதமாக அந்த துறையை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

Tags:    

Similar News