உள்ளூர் செய்திகள்

கைது

கந்துவட்டி வழக்கு: ஒருவர் கைது

Published On 2022-06-15 09:33 GMT   |   Update On 2022-06-15 09:33 GMT
  • மதுரையில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
  • ஆபாசமாக பேசி வட்டி கேட்டு மிரட்டியுள்ளார்.

மதுரை

மதுரை காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வி (45). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கினார்.

இந்த தொகைக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வட்டியாக ஒவ்வொரு மாதமும் செலுத்தி வந்தார். 2 மாதமாக வட்டியை செலுத்த முடியவில்லை.

ஆத்திரமடைந்த ஆறுமுகமும், உறவினர் பூரணமும் செல்வி வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசி வட்டி கேட்டு மிரட்டினர்.

இதுகுறித்து செல்வி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பேர்மீதும் வழக்குப்பதிவு செய்து கந்துவட்டி சட்டத்தில் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News