உள்ளூர் செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2023-01-02 08:20 GMT   |   Update On 2023-01-02 08:20 GMT
  • ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினார்.
  • உலகப்புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

அலங்காநல்லூர்

உலகப்புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று அலங்காநல்லூர் வாடிவாசலை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது டி.எஸ்.பி பாலசுந்தரம், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் மற்றும் விழா குழுவினர், போலீசார் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்வையாளர் கேலரி அமைப்பது, காளைகள் நிறுத்தப்படும் இடம், காளைகள் வந்து சேரும் இடம், வாடி வாசல் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளையும் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News