- மதுரை பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது.
மதுரை
மதுரை அண்ணா பஸ் நிலையப் பகுதியல் மழைநீர் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளிட்டவற்றிற்கு வருவோர் அண்ணா பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மாட்டுத்தாவணி பஸ் நிலையம் தொடங்கப்படுவதற்கு முன்பாக முறையாக பராமரிக்கப்பட்டு வந்த அண்ணா பஸ் நிலையம் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது.
பஸ் நிலையத்தின் உள் பகுதியில் மழைநீர், கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி பணியாகவும் காட்சியளிக்கிறது. மேலும் பஸ் நிலைய பகுதி முழுவதுமே குடிமகன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பெண் பயணிகளும், பஸ் நிலையத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகிகளும், போக்குவரத்து கழகமும், மாநகர காவல் துறையும் இணைந்து செயல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அண்ணா பஸ் நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும். பயணிகள் அச்சமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.