உள்ளூர் செய்திகள்

பெரியார் படத்திற்கு தி.மு.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

Published On 2022-09-19 06:30 GMT   |   Update On 2022-09-19 06:30 GMT
  • திருமங்கலத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
  • இதனைத்தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர்.

திருமங்கலம்

பெரியாரின் 144-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி திருமங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தி.மு.க. வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்து ராமலிங்கம், சாமிநாதன், நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகர சபை தலைவர் ரம்யா முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ராமமூர்த்தி, ஜெயசந்திரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், அணி அமைப்பாளர்கள் மதன், பாசபிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் நகர செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர். இதில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சதீஷ்சண்முகம், நிர்வாகிகள் பாண்டி, சிவனாண்டி, உச்சப்பட்டி செல்வம், வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் வைரன், ம.தி.மு.க. நகர செயலாளர் அனிதா பால்ராஜ், அவைத்தலைவர் சிவனாண்டி, பொருளாளர் முருகன், இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜகோபால், நகர துணை செயலாளர் மாரிசாமி, விவசாய அணி துணைச் செயலாளர் காசி ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News