உள்ளூர் செய்திகள்

மாதாந்திர கவுன்சிலர் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

வீடு, வீடாக சென்று குறைகேட்க முடிவு

Published On 2023-10-10 08:35 GMT   |   Update On 2023-10-10 08:35 GMT
  • வீடு, வீடாக சென்று குறைகேட்க முடிவு செய்துள்ளனர்.
  • கவுன்சிலர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்க லம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலை வர் ஆதவன்அதியமான், சுகாதார அலுவலர் சண் முகவேல் ஆகியோர் முன் னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்து ரைத்தனர்.

சிறப்பு தீர்மானமாக திருமங்கலம் நகர் பகுதியில் மாதத்தில் 5 வார்டுகள் வீதம் வீடு தேடி சென்று குறைகளை தீர்க்கும் சிறப்பு முகாம்களை நடத்துவது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்துதல், காய்ச்சல் குறித்து தினசரி நகரில் வீடு, வீடாக ஆய்வு செய்வது, பெண்களுக்கு மாதந் தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சின்ன சாமி, வீரக்குமார், திருக்குமார், ஜஸ்டின் திரவி யம், பாண்டி, வினோத், காசிபாண்டி, பெல்ட்முரு கன், சரண்யாரவி, பாண்டி, முத்துக்காமாட்சி, ரம்ஜான் பேகம் சாலிகாஉல்பத், பவுசியா, அமுதா, ராஜகுரு, நகராட்சி மேலாளர் ரத்தின குமார், ஓவர்சீஸ் ராஜா, நகர அமைப்பு அலுவலர் சின்னா, சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News