குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
- குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
- குழந்தைகளுக்கு குழந்தைகள் மூலமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை
மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் 2-வது மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி தலைமையில் நடந்தது.
குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சோபனா, மதுரை வடக்கு துணை தாசில்தார் தனமூர்த்தி, மாநகராட்சி மண்டல அதிகாரி அகமத்இப்ராகிம், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் 2-வது மண்டலத்தில் உள்ள கவுன்சிலர்கள் மாநகராட்சி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை ஒருங்கிணைந்து கல்வி இடைநிற்றலை தடுத்தல், குழந்தைகள் பாலியல் தீங்கிழைப்பில் இருந்து தடுத்தல் தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருமண மண்டப உரிமையாளர்கள், கோவில் நிர்வாகங்களில் கூட்டம் நடத்தி மணமக்கள் அரசு நிர்ணயம் செய்த வயதை பூர்த்தி செய்துள்ளனரா? என்பதை சான்றிதழ் மூலம் உறுதி செய்த பிறகே திருமணத்துக்கு அனுமதிக்க வேண்டும், குழந்தைகளுக்கு குழந்தைகள் மூலமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.