உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் கத்தி முனையில் செயின்-செல்போன் பறிப்பு

Published On 2023-03-27 08:10 GMT   |   Update On 2023-03-27 08:10 GMT
  • அலங்காநல்லூர் அருகே வாலிபரிடம் கத்தி முனையில் செயின்-செல்போன் பறிக்கப்பட்டது.
  • இதுபற்றிய புகாரின்பேரில் அலங்கா நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அலங்காநல்லூர்

மதுரை ஆரப்பாளையம் லட்சுமணபுரத்தை சேர்ந்த வர் ராமமூர்த்தி(வயது36). சம்பவத்தன்று இவர் அலங்காநல்லூரை அடுத்த பெரியஊர்சேரி பகுதியில் ஆட்டு பண்ணை வைத்து பராமரித்து வருகி றார். இவர் இரவு நேரத்தில் ஆட்டு பண்ணையில் தங்கி இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ராமமூர்த்தி அணிந்திருந்த தங்க செயின், மோதிரம், ஒரு செல்போனை யும் பறித்து கொண்டு ஓடி விட்டனர். இதுபற்றிய புகாரின்பேரில் அலங்கா நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News