உள்ளூர் செய்திகள்

பரவலாக மழை பெய்ததால்  குடைபிடித்து சென்றனர்.

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்தது: கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2022-11-22 06:52 GMT   |   Update On 2022-11-22 06:52 GMT
  • மீனவர்கள் உடனே கரை திரும்பவேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
  • துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர், நவ.22-

வங்ககடலில் குறைந்த காற்றழுத்தம் வலுவிழந்து ள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் சுமார் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவ ர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். நெடுங்கடல் தூரத்தில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனே கரை திரும்பவேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்து றை அதிகாரிகள் 49 மீனவ கிராமங்களுக்கும் எச்சரி க்கை அறிவிப்பு விடுத்து ள்ளனர். இதனைத்தொ டர்ந்து கடலூர் மாவட்ட த்தில் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று காலை யும் அவர்கள் வீட்டி லேயே முடங்கினர். இதனால் துறைமுக பகுதி யில் படகுகள் ஓய்வெடு த்தன. வானிலை ஆய்வு மையம் அறிவித்தப்படி கடலில் சீற்றம் அதிகம் உள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை அறிவித்தப்படி இன்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடலூர் நகர் பகுதியான திருப்பாதிரிபுலியூர், மஞ்ச க்குப்பம், செம்மண்டலம், பாதிரிகுப்பம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அலு வலகம், பள்ளிக்கு செல்வோர் குடைபிடித்தப்படி சென்றதை காண முடிந்தது.

Tags:    

Similar News