உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே கடந்த 20-ந்தேதி புறப்பட்டவர்: வெளியூரில் வேலை பார்க்க சென்ற வாலிபர் மாயம்

Published On 2022-12-05 10:07 GMT   |   Update On 2022-12-05 10:07 GMT
  • மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 20-ந்தேதி புறப்பட்டுள்ளார்.
  • மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மோகன்குமாரை தேடி வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள வேங்கனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை.இவரது மகன் மோகன்குமார் (வயது 20). இவர் புதுச்சேரியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

கடந்த மாதம் மோகன்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 20-ந்தேதி புறப்பட்டுள்ளார்.

இதையடுத்து மோகன்குமாரின் தம்பி உடன் சென்று அவரை திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஊருக்கு சென்ற மோகன்குமார் அதன்பிறகு யாரையும் தொடர்பு கொண்டு பேசவில்லை.இதையடுத்து புதுச்சேரியில் அவர் வேலை செய்யும் இடத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது மோகன்குமார் அங்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மோகன்குமாரின் தந்தை தங்கதுரை கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மோகன்குமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News