உள்ளூர் செய்திகள்
குனிச்சி, கொரட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
- கொரட்டி மற்றும் குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
- பஞ்சணம்பட்டி, புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கொரட்டி மற்றும் குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், நாளை (19-ந் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி, பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி காமாட்சிப்பட்டி, கொரட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு, சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங்கரை, குனிச்சி, பல்லப்பள்ளி, அரவமட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்படி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சம்பத்து தெரிவித்துள்ளார்.