வேலாயு தம்பாளையம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா பத்தினம்பட்டி அருகே மேல் காண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணா (வயது 21). இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மத்திய அரசுக்கு சொந்த மான அரசுடை மையாக்க ப்பட்ட வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் குணா தனது நண்பர்களுடன் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நானப்பரப்பு பிரிவு அருகே தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கரூரிலிருந்து சேலம் நோக்கி அதி வேகமாக வந்த கார் நிலை தடுமாறி குணா ஓட்டிச் சென்ற மோட்டார் பைக் மீது மோதியது. இதில் குணா மோட்டார் பைக்குடன் சாலையில் கீழே விழுந்தார் .இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டம் கபிலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.