உள்ளூர் செய்திகள்
கரூருக்கு காவிரி ரத யாத்திரை குழுவினர் வருகை
- கரூருக்கு காவிரி ரத யாத்திரை குழுவினர் வருகை தந்தது
- பாதுகாப்பு சங்கத்தினர் வரவேற்றனர்
கரூர்:
நதியில் குப்பை, கழிவுகளை கொட்டுவதை தவிர்த்தல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் லட்சக்கணக்கான மரங்களை நடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், கடந்த, மாதம் 21ல் கர்நாடகா மாநிலம், தலைக்காவிரியில் இருந்து இந்த குழுவினர் காவிரி ரத யாத்திரையை தொடங்கினர்.
இந்நிலையில் நேற்று காலை கரூர் வடிவேல் நகர் முனியப்பன் கோவில் பகுதிக்கு ரத யாத்திரை குழுவினர் வந்தனர். அவர்களை, அனைத்திந்திய இந்து திரு கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து, கரூர் தீயணைப்பு அலுவலக வளாகத்தில் உள்ள சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமி கோவிலில், காவிரி ரத யாத்திரை குழுவினர், மகேஸ் வர பூஜை நடத்தி, சிறப்பு வழிபாடு செய்தனர். இக்குழுவினர் இரண்டாம் நாளாக