கரூர் மாவட்டத்தில் சிறப்பு கிராமசபா கூட்டங்கள்
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் சிறப்பு கிராமசபா கூட்டங்கள் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம கூட்டம் குறுக்குச்சாலை பங்களா நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சோமசுந்தரம், முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரகுபதி வரவேற்றார்.
அதேபோல் கோம்புபாளையம் ஊராட்சி சார்பில் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலில் கிராம சேவை கூட்டம் நடைபெற்றது .கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பசுபதி தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் வேத சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் திருக்காடுதுறை ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் நளினி வரவேற்றார். என்.புகளூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் செல்வி முன்னிலை வைத்தார்.ஊராட்சி செயலர் இந்து வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமசபை கூட்டங்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள், கால்நடை துறை மருத்துவர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.