உள்ளூர் செய்திகள்

கரூர் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-09-13 09:24 GMT   |   Update On 2023-09-13 09:24 GMT
  • இரு குடும்பத்தினரிடையே நடைபெற்ற மோதலில் கரூர் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
  • போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வேலாயுதம்பாளையம்,  

கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரவி (54). இவரது மனைவி விஜயா (49). அதே பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (50).இவரது மனைவி ராதிகா (45). இரு குடும்பத்தினர் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விஜயாவின் வீட்டிற்கு அருகே வந்த சிவசுப்பிரமணியம் என்பவர் விஜயாவை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த சிவசுப்பிரமணியன் கையில் வைத்திருந்த அறிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அவரது மனைவி ராதிகா, அவரது சித்தி தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து விஜயாவை தாக்கியுள்ளனர். இதில் விஜயா படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விஜயா, வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் விஜயாவை அரிவாளால்வெட்டி தாக்கியதாக ராதிகா, அவரது கணவர் சிவசுப்பிரமணியன், அவரது சித்தி தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அதேபோல் ராதிகா கொடுத்துள்ள புகாரில் தன்னை வினோத் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து வலது கை மேல் போட்டு காயப்படுத்தியதாகவும், சிந்து, விஜயா, ரவி ஆகியோர் தலை முடியை பிடித்து இழுத்து தன்னை தாக்கியதாகவும் கூறி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News