உள்ளூர் செய்திகள்

பிள்ளபாளையத்தில் நெல் அறுவடை பணி

Published On 2023-01-26 13:14 IST   |   Update On 2023-01-26 13:14:00 IST
  • பிள்ளபாளையத்தில் நெல் அறுவடை பணி நடந்து வருகிறது
  • இந்த நெல் வயல்களுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்திலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டது

கரூர்:

பிள்ளபாளையம் கிராமத்தில் நெல் வயல்களில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி துரிதமாக நடந்து வருகிறது. கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிள்ளபாளையம் கிராம பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நெல் வயல்களுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்திலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டது.

இதன் மூலம் நெல் வயல்களில் நெற்கதிர்கள் வளர்ச்சியடைந்து முதிர்ந்தன. தற்போது இயந்திரம் மூலம் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Tags:    

Similar News