உள்ளூர் செய்திகள்
- விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
- அமராவதி ஆறுகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
கரூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி கரூர் மாவட்டத்தில் 277 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. இவற்றில் முதல் நாளான கடந்த 31ம் தேதி 9, 2வது நாளான நேற்று முன்தினம் கரூரிலிருந்து 38, இதர பகுதிகளிலிருந்து 155 என மொத்தம் 193 என இரு நாட்களில் 202 சிலைகள் காவிரி, அமராவதி ஆறுகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. 3வது நாளான நேற்று அரவக்குறிச்சி மற்றும் சின்னதாராபுரம் பகுதிகளில் தலா 18 என மொத்தம் 36, வேலாயுதம்பாளையம் பகுதியில் 27, குளித்தலையில் 8 என மொத்தம் 35 என ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முறையே முதல் இரு பகுதிகளில் அமராவதி ஆறு, அடுத்த இரு இடங்கள் காவிரி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. ஊர்வலத்தை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருதன.