உள்ளூர் செய்திகள்
பண்டுதகாரன் புதூரில் - கறவைமாடு வளர்ப்பு கட்டண பயிற்சி முகாம்
- வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் கட்டண பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
- வரும் 29-ந் தேதி காலை 10 மணிக்குள் வந்து ரூ.300 செலுத்தி பயிற்சியில் பங்கு கொண்டு சான்றிதழ் பெற்று பயனடையலாம்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இலாபகரமான கறவைமாடு வளர்ப்பு என்ற தலைப்பில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் கட்டண பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்து வரும் 29-ந் தேதி காலை 10 மணிக்குள் வந்து ரூ.300 செலுத்தி பயிற்சியில் பங்கு கொண்டு சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் அமுதா ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.