உள்ளூர் செய்திகள்
கரூர் அருகே வாலிபருக்கு கத்திகுத்து
- கரூர் அருகே வாலிபரை கத்தியால் தாக்கினர்
- இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், வெள்ளியணை, புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). கடவூர் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (35) ஆடு வியாபாரி, இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், வெள்ளியணை - விஜயபுரம் சாலையில், சக்திவேல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்த சிவாஜி, அவரை வழிமறித்து, தகாத வார்த்தையால் திட்டி, கத்தியில் குத்தினார். அதில், சக்திவேலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, சக்திவேல் அளித்த புகாரின் பேரில், சிவாஜியை வெள்ளியணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.