உள்ளூர் செய்திகள்

சட்ட விரோத மது விற்பனை 13 பேர் கைது

Published On 2022-10-01 12:40 IST   |   Update On 2022-10-01 12:40:00 IST
  • சட்ட விரோத மது விற்பனை 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

கரூர்:

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார், மாயனூர், வாங்கல், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், கரூர் டவுன், வேலாயுதம்பாளையம், தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தந்த பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற் பனை செய்ததாக மருதநாயகம்(வயது 73), சுரேஷ்குமார் (42), ஜெகதீஷ்(37), செந்தில் (36), பாலகிருஷ்ணன் ( 45), மற்றொரு பாலகிருஷ்ணன் (46), அம்சவள்ளி (39), செந்தில்குமார்(46), அசோக்குமார் (42), சின்னதுரை (43), ரங்கராஜ்(55), ரத்தினவேல் (64), மற்றொரு செந் தில்குமார் (30) ஆகிய 13 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 119 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News