உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே பெண் மானபங்கம்

Published On 2022-07-13 07:33 GMT   |   Update On 2022-07-13 07:33 GMT
  • மணவாளக்குறிச்சி போலீசில் புகார்
  • 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையை சேர்ந்தவர் ஸ்டான்லி. இவரது மனைவி கிஜிலா (43). இவர் அப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 10-ந் தேதி இவர் வேலை முடிந்து ஆற்றின்கரை பகுதியில் நடந்து செல்லும்போது கல்லடிவிளையை சேர்ந்த வினு, கோபகுமார் உள்பட 5 பேர் கிஜிலாவை வழிமறித்து தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் திட்டினார்கள்.

பின்னர் அவரை கீழே தள்ளி தாக்கி னர். மேலும் அவரை மானபங்கப்படுத்த முயற்சித்தனர்.

இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News