விவசாயத்திற்காக அணைகளில் இருந்து அடுத்த மாதம் 30-ந்தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் - ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அடைக் கப்படுகிறது
- மாவட் டத்தில் உள்ள பல கால்வாய்களில் கடை மடை பகுதிகளுக்கு இன்று வரை தண்ணீர் போய் சேரவில்லை.
கன்னியாகுமரி :
தமிழக முதல்- அமைச் சர் மு.க.ஸ்டாலின், நீர்வ ளத்துறை அமைச்சர், தமிழ் நாடு அரசின் நீர்வளத் துறையின் அரசு கூடுதல் செயலாளர் ஆகியோருக்கு கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது:-
குமரிமாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு- 1, சிற்றாறு-2 அணைகளில் இருந்து விவசாயத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அடைக் கப்படுகிறது. இந்த ஆண்டும் ஜூன் 1 -ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத னால் விவசாயிகள் பயன டைந்தனர். ஆனால் மாவட் டத்தில் உள்ள பல கால்வாய்களில் கடை மடை பகுதிகளுக்கு இன்று வரை தண்ணீர் போய் சேரவில்லை.
குறிப்பாக சிற்றாறு பட்ட ணம் கால்வாயின் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட கடைவரம்பு பகுதிக ளான கருங்கல், பாலூர், சுண்டவிளை, தேவிகோடு முதல் கைசூண்டி, புதுக் கடை, பைங்குளம், தேங்காப்பட்ட ணம் வரை கடந்த பல ஆண்டுகளாக அதிகாரிகளின் அலட்சியத்தால் தூர்வாரப்பட வில்லை. கால்வாய்களில் சுமார் 2 அடிக்கும் மேல் புதர் மண்டிமண் தூர்ந்து காணப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகளால் பயிரிட்டுள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது குமரி மாவட்டத்தில் கடுமையான வெயில் அடிப்பதினால் மேற்கண்ட கால்வாய்க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. ஆகவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அணை ளில் தண்ணீரை அடைக் காமல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை அனைத்து கால் வாய்களிலும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடவேண்டும்.
மேலும் உங்கள் தொகுதி யில் முதல் -அமைச்சர் திட் டத்தில் குமரி மாவட்டத் தில் உள்ள கோதையாறு வடிநில கோட்டத்தில் உள்ள கால்வாய்களை ரூ.53 கோடி மதிப்பீட்டில் சீர மைப்பதற்காக ஆய்வு செய் வதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் நடை பெற்று வருகிறது. ஆய்வு பணிகளை விரைவில் முடித்து அரசுக்கு ஆய்வறிக் கையை வழங்கிபோர்க்கால அடிப்படையில் கால்வாய் களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.