உள்ளூர் செய்திகள்

குலசேகரத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.

குலசேகரத்தில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு 19-வது நாளாக போராட்டம்

Published On 2022-11-25 08:25 GMT   |   Update On 2022-11-25 08:25 GMT
  • பொதுவாக வடகிழக்கு பருவ மழை ஓய்ந்த பின்னர் நவம்பர் மாதம் 2 வது வாரம் மற்றும் டிசம்பர் மாதங்கள் ரப்பர் பால் சீசன் ஆகும்
  • தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீ லினை செய்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

கன்னியாகுமரி:

அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி தொழிலாளர் துறை, வனத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகிய 3 துறை அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தினசரி ரூ.40 ஊதிய உயர்வு வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தமாக மாற்றப்படாமலும், ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் 3 அமைச்சர்கள் முன்னி லையில் ஒப்பு கொள் ளப்பட்ட ரூ.40 ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் தினந்தோறும் தொழிலாளர்கள் ரப்பர் கழக கோட்ட மேலாளர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் 18-வது நாளாக நேற்று வேலை நிறத்தம் நடைபெற்ற நிலையில், கோதையாறு, சிற்றாறு, மணலோடை மற்றும் கீரிப்பாறை கோட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காத்திருப்புப் போராட் டங்கள் நடைபெற்றன.

பொதுவாக வடகிழக்கு பருவ மழை ஓய்ந்த பின்னர் நவம்பர் மாதம் 2 வது வாரம் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரப்பர் பால் சீசன் என்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக ரப்பர் கழகத்திற்கு தினம்தோறும் தமிழக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவ தாக கூறப்படுகிறது. இதைப் போன்று தொழிலா ளர்களுக்கு ஊதிய இழப்பும் ஏற்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் தினமும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவரமாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீ லினை செய்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

இந்நிலையில் கால வரையற்ற வேலை நிறுத் தித்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதர வாக கன்னியாகுமரி மாவட்ட சி.ஐ.டி.யூ. தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்தில் சங்க பொதுச் செயலாளர் வல்சகுமார், தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News