உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.10.5 கோடியில் திட்ட பணிகள்

Published On 2022-06-15 07:50 GMT   |   Update On 2022-06-15 07:50 GMT
  • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுறை
  • கலெக்டர் அரவிந்த் ஆய்வு

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியா குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக ரூ.10.5 கோடியில் நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய அலுவலக கட்டிடத்தின் அனைத்து தளங்களையும் நேரில் பார்வையிடப்பட்டது.

வடசேரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தோடு இந்நிலையத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய அறையினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து வடசேரியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீக்கும் பணி யினையும், வடசேரி கிருணன்கோவில் பகுதி களில் உள்ள குடிநீர் சுத்திரிகரிப்பு நிலை யத்தினையும் நேரில் பார்வையிட்டதோடு, பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நாகர் கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற் கொண்டார். ஆய்வில் மாநகர நகர்நல அலுவலர் விஜயசந்திரன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News