உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

இரணியல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

Published On 2022-11-22 13:54 IST   |   Update On 2022-11-22 13:54:00 IST
  • இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

பாலப்பள்ளம் அருகே உள்ள வழுதலம்பள்ளம் ஒப்பிவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி பகவதி (வயது 65). இவர் நேற்று திங்கள்நகர் பஸ் நிலையத்திலிருந்து பேருந்தில் மணவாளக்குறிச்சிக்கு சென்றார்.

அப்போது மாங்குழி பஸ் நிலையத்தில் பஸ் நிற்கும்போது பகவதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பஸ்சில் தேடி பார்த்தார். எனினும் செயின் கிடைக்கவில்லை. பகவதியிடம் இருந்து யாரோ மர்ம நபர் செயினை திருடி சென்று விட்டனர். இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News