உள்ளூர் செய்திகள்

சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

Published On 2023-10-11 07:25 GMT   |   Update On 2023-10-11 07:25 GMT
  • கலந்தாய்வு கூட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
  • 15-வது தேசிய மாநாடு நிகழ்வுகள் பற்றி பேசப்பட்டது.

மார்த்தாண்டம் :

சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக நிறுவன தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டார்.கழகத் தலைவர் அசோக் குமார், பொதுச் செயலாளர் செந்தில் குமார், துணை தலைவர் சிவா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வு கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 10-ந் தேதி வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் 15-வது தேசிய மாநாடு நிகழ்வுகள் பற்றி பேசப்பட்டது.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில துணை பொதுச்செயலாளர் லாரன்ஸ், மாவட்ட தலைவர்கள் சுரேஷ்குமார், பச்சைமால், மாவட்ட துணை தலைவர்கள் தாஸ், ரமேஷ், மாவட்ட செயலாளர்கள் செல்வின் பாபு, செந்தில்குமார், நஜ்முதீன், ராஜகுமார், கிங்ஸ்லி, ஜெரால்ட், குளச்சல் தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீ பிரபி மற்றும் குமரி மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் செய்து இருந்தனர். கூட்ட முடிவில் மோகனகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News