உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே ரெயில் மோதி காவலாளி சாவு

Published On 2023-08-03 07:13 GMT   |   Update On 2023-08-03 07:13 GMT
  • தண்டவாளத்தை கடந்து வேலைக்குச் சென்று வருவது வழக்கம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரணியல், ஆக.3-

திருவட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 64). இவர் நெய்யூர் சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

தற்போது பரம்பை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் பணி நடந்து வருவதால், வில்சன் பரம்பை பஸ் நிறுத்தத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து வேலைக்குச் சென்று வருவது வழக்கம். இன்று காலையும் அவர், தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த வில்சன் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், இரணியல் போலீஸ் நிலையம் மற்றும் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த ரெயில்வே போலீசார், வில்சன் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News