உள்ளூர் செய்திகள்
போதை தடுப்பு விழிப்புணர்வு தொடர் ஜோதி ஓட்டம்
- கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 பகுதியிலிருந்து துவங்கியது.
- அருமனையிலிருந்து துவங்கிய தொடர் ஜோதி ஓட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில்உலகபோதை தடுப்பு விழிப்புணர்வு தின தொடர் ஜோதி ஓட்டம் 21 பகுதியிலிருந்து துவங்கி நாகர் கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவுபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக அருமனையிலிருந்து அருமனை பேரூராட்சித் தலைவர் வி.எம்.லதிகா மேரி, பேரூராட்சிகளின் துணை இயக்குனர் விஜயலட்சுமி அகியோர் துவக்கிவைத்த தொடர் ஜோதி ஓட்டத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.