உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

Published On 2023-09-20 07:33 GMT   |   Update On 2023-09-20 07:33 GMT
  • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
  • 27-வது வார்டு ஆசாரிமார் பெரிய தெருவில் ரூ.5.10 லட்சத்தில் தார் சாலை

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிவிளை அம்மன் கோவில் மேலத் தெரு பகுதியில் ரூ.2.50 லட்சத்தில் கான்கிரீட் தளம், 32-வது வார்டு சைமன் நகரில் ரூ.51 லட்சத்தில் தார் சாலை, 33-வது வார்டு கம்பர் தெருவில் ரூ.5.81 லட்சத்தில் கான்கிரீட் தளம், 50-வது வார்டு வெள்ளாரன்விளையில் ரூ.27 லட்சத்தில் கான்கிரீட் தளம், 41-வது வார்டு வட்டவிளை, சானல் கரை பகுதியில் ரூ.1.80 லட்சத்தில் மழைநீர் வடிகால் ஓடை பக்க சுவர், 40-வது வார்டு பைத்துமால் நகரில் ரூ.7.50 லட்சத்தில் தார் தளம், 27-வது வார்டு ஆசாரிமார் பெரிய தெருவில் ரூ.5.10 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் கோபால சுப்பிரமணியன், தி.மு.க செயற்குழு உறுப்பினர் சாதாசிவன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News