உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

மணவாளக்குறிச்சியில் குடும்ப தகராறில் மோதல்

Published On 2022-11-13 08:00 GMT   |   Update On 2022-11-13 08:00 GMT
  • போலீசார் 6 பேர் மீது வழக்கு
  • படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி பீச் ரோடை சேர்ந்தவர் பீர் காஜ முகைதீன்.இவரது மனைவி முபீனா (வயது 34).இருவரும் உகண்டாவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா 2-ம் அலையில் பீர் காஜ முகைதீன் இறந்து விட்டார். இதற்கு பிறகு முபீனா உகண்டா சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு ஊர் திரும்பி கணவர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் வீட்டில் முபீனா வசிப்பது தொடர்பாக முபீனாவுக்கும் மாமியார் மெகர்பான் பீவிக்குமிடையே தகராறு இருந்து வருவதாக கூறப்ப டுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவ ருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கை கலப்பு ஏற்பட்டது.அவர்கள் இரு தரப்பினராக மோதி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முபீனா, மெகர்பான் பீவி இருவரும் படுகாயமடைந்தனர்.

இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து இருவ ரும் தனித்தனியாக மணவா ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News