உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே மருந்துகோட்டையில் வன விலங்கு கடித்து கன்று குட்டி சாவு

Published On 2023-10-28 09:27 GMT   |   Update On 2023-10-28 09:27 GMT
  • சுமார் 6 மாதங்களாக 23 ஆடுகளை வேட்டையாடி கொன்றதாக கூறப்படுகிறது.
  • கன்றுகுட்டியை காட்டு விலங்கு மீண்டும் அடித்து கொன்றுள்ளது

தக்கலை :

கோதநல்லூர் பேரூராட்சி முட்டைக்காடு சரல்விளை பகுதியில் மலைச்சிங்கம் எனப்படும் காட்டு விலங்கு சுமார் 6 மாதங்களாக 23 ஆடுகளை வேட்டையாடி கொன்றதாக கூறப்படுகிறது. இதனை பிடிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையினரிடம் முறையிட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவி பொருத்தப்பட்டு காட்டுவிலங்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருந்துகோட்டை பகுதியில் கன்றுகுட்டியை காட்டு விலங்கு மீண்டும் அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு விலங்கால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உறுதியான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News