காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 53 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாகர்கோவில்
நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ. மணிகண்டபிரபு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ந்தேதி தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் எனது (ஜெ. மணிகண்டபிரபு) தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் குமரே சன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மன்னன் பெருமாள், ஸ்ரீதர், பால சுப்பிரமணியன் ஆகியோரால் நாகர்கோவில் வடசேரி, தக்கலை, குளச்சல், கருங்கல், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்ெகாள்ளப்பட்டது.
மேற்படி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு அக்டோபர் 2-ந்தேதி விடுமுறை அளிக்கப் பட வேண்டும். அதற்கு மாறாக விருப்பத்தின் பேரில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்து டன் கூடிய மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். இதற்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலை அளிப்பவர் படிவம் வி.ஏ.யிலும், உணவு நிறுவ னங்களின் வேலை அளிப்ப வர் படிவம் ஐ.வி.இ.இ.யிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் தொழிலா ளர்களிடம் கையொப்பம் பெற்று ஒரு நகலை நிறுவ னத்தின் அறிவிப்பு பலகை யிலும், மற்றொரு நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை உதவி ஆய்வாளர்க ளுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அனுப்பி வைக்க வேண்டும். இதனை கடைப் பிடிக்க தவறிய மற்றும் விடுமுறை அளிக்காத 33 கடைகள், 20 உணவு நிறுவனங்களின் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.