உள்ளூர் செய்திகள்
அன்பரசன்
குமரி மாவட்டத்தில் கோவில்களில் திருடிய வாலிபர் கைது
- கோவில்களில் உள்ள சி.சி.டி.வி.காமிரா பதிவு காட்சிகளை கைப்பற்றி ஆய்வு
- போலீசார் இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், அருமனை, களியக்காவிளை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இந்து கோவில்களில் தொடர்ந்து உண்டியல்களை உடைத்து திருடும் சம்பவம் நடந்து வந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். திருட்டு நடந்த கோவில்களில் உள்ள சி.சி.டி.வி.காமிரா பதிவு காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையன் யார் என தெரிய வந்தது.
நாகர்கோவில் ராமன்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்பரசன் (வயது 29) என்பவர் தான் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதை யடுத்து தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் அருளப்பன் தலைமை யிலான போலீசார் இன்று அதிகா லையில் அன்பர சனை மார்த்தா ண்டம் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.