உள்ளூர் செய்திகள்

பெருமாள்

ஆரல்வாய்மொழியில் ஆட்டோ மோதி தொழிலாளி பலி

Published On 2023-01-01 13:17 IST   |   Update On 2023-01-01 13:17:00 IST
  • ஆரல்வாய்மொழி போலீசார் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
  • பலியானவரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

கன்னியாகுமரி:

ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 46). செங்கல்சூளை தொழிலாளி. இவர் நேற்று மாலை பஞ்சாயத்து அலுவலகம் முன்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று பெருமாள் மீது மோதியது.

இதில் பெருமாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த பெருமாளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் முருகன் ஆரல் வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ டிரைவர் ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பெருமாளின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு உள்ளனர். பலியான பெருமாளுக்கு மல்லிகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளது.

Tags:    

Similar News