உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் நடந்த வள்ளலார் முப்பெரும் விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசு வழங்கியபோது எடுத்த படம்.

நாகர்கோவிலில் வள்ளலார் முப்பெரும் விழா

Published On 2022-12-19 10:18 GMT   |   Update On 2022-12-19 10:18 GMT
  • மதத்தின் பெயரில் நடக்கும் வெறுப்பு அரசியலை முறியடிக்க வேண்டும்
  • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் வள்ள லார் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக குமரி மாவட்ட அறநிலையத்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்ட பத்தில் நேற்று வள்ளலார் முப்பெரும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சுவிதா பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமயங்கள், மதங்களின் அடிப்படையில் மக்களை அடிமைப்படுத்தி ஒரு கூட் டம் வளர்ந்து வந்தது. அதை எதிர்த்தவர் வள்ளலார். ஆனால் இன்றைய உலகில் பொறாமையும், பகைமையும் வளர்ந்து வருகிறது. கடவுளை யும், இயற்கையையும் நேசிக்க வேண்டும். ஆனால் இப் போது கடவுளின் பெயரால் இயற்கையை அழிக்கிறோம்.

அனைத்து மதங்களும், சமயங்களும் அன்பையும், நீதியையும்தான் போற்று கின்றன. அனைவரும் சமம். அன்பு ஒன்றுதான் இந்த உலகில் நிலையானது. வள்ள லார் கூறிய பல சித்தாந்தங் கள் இப்போது மிகவும் அவ சியமாகிறது. அமைதியும், நீதியும்தான் மக்களை நல்வ ழிப்படுத்தும் தற்போது சிலர் மக்கள் மத்தியில் வெறுப்பு பிரசாரத்தை மேற் கொண்டு வருகிறார்கள். குமரி மாவட் டத்தில் பரவி வரும் இந்த வெறுப்பு பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். நமது நாட் டில் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் செய்ய நினைப்பவர்களின் முயற் சியை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

விழாவில் கலெக்டர் அர விந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்ற தலை வர் சவுந்தர்ராஜன், வடலூர் வள்ளலார் உலக மய தலை வர் சூரியமூர்த்தி, அறநிலை யத்துறை உதவி ஆணையர் தங்கம், அறநிலையத்துறை பொறியாளர்ராஜ்குமார் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News