உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான பேருந்தை படத்தில் காணலாம்

தக்கலை அருகே டாரஸ் லாரி- அரசு பஸ் மோதல்

Published On 2023-01-30 15:16 IST   |   Update On 2023-01-30 15:16:00 IST
  • பஸ்சில் பயணிகள் யாரும் இல்லை.
  • நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி எம் சேண்ட் ஏற்றி கொண்டு டாரஸ் லாறியை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் அழைத்து விசாரணை

கன்னியாகுமரி:

திருவட்டார் பனிமனை யில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று நாகர்கோவில் நோக்கி சென்றது. தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே வரும் போது எதிரே நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி எம் சேண்ட் ஏற்றி கொண்டு டாரஸ் லாறி வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது. பஸ்சின் கண்ணாடி முழுவதும் உடைந்தது.

பஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் டாரஸ் லாறி ஓட்டி வந்த டிரைவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News