உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

நாகர்கோவிலில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

Published On 2022-12-14 10:07 GMT   |   Update On 2022-12-14 10:07 GMT
  • கலெக்டர் அரவிந்த் தகவல்
  • எஸ்.எஸ்.சி. தேர்விற்கு விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்.

நாகர்கோவில்:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எஸ்.எஸ்.சி. தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பணிகளுக்கான 4500 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்.

மேலும் அடுத்த ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாைணயத்தால் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 12 -ந் தேதி தொடங்கப்பட்டுள்ளது .

இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது . மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது . இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் ஆதார் கார்டு நகலுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News