உள்ளூர் செய்திகள்

சீனிவாச பெருமாளுக்கு கல்யாண உற்சவம்

Published On 2023-11-24 15:07 IST   |   Update On 2023-11-24 15:07:00 IST
  • சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

  தேன்கனிக்கோட்டை, நவ.24-

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா கெலமங்கலம் நகரில் உள்ள சத்ய சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சத்ய சாய் பாபாவின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச கல்யாண பெருமா ளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலை நடைபெற்றது.

பின்னர் தேவி, பூதேவி சீனிவாச பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவி யங்களால் அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து பட்டு உடுத்தி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Similar News