கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்.
கடமலை- மயிலை ஒன்றிய இலவம் பஞ்சு விவசாயிகள் சங்க கூட்டம்
- குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வியாபாரிகள் மட்டும் அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர்.
- உள்ளூர் வியாபாரிகளை அழைத்து அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கீழ் பஞ்சு கொள்முதல் செய்ய க்கூடாது உள்ளிட்ட தீர்மா னங்களை விவசாயிகள் தெரிவித்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி உத்தம பாளையம் கோட்டா ட்சியர் தலைமையில் இலவம் பஞ்சு விலை நிர்ணயம் தொட ர்பான முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த இலவம் பஞ்சு வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில் தமிழகத்தில் 90 சதவிகிதம் இலவம் பஞ்சு தேனி மாவட்டத்தில் உற்ப த்தியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து 2000 லோடு பஞ்சு உற்பத்தி செய்து வியாபாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலவம்பஞ்சு சராசரியாக ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையாகி வந்தது. இதனால் இலவம்ப ஞ்சு விவசாயி களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அதிக அளவில் வருவாய் கிடைத்தது. இந்தச் சூழ்நிலையில் உள்ளூர் வியாபாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து பஞ்சு விலையை ரூ.60க்கும் கீழ் குறைத்து நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர்.
மேலும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வியாபாரிகள் மட்டும் அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.80 வரை இலவம் பஞ்சு விற்பனை ஆகிறது. பஞ்சு விலை குறைவிற்கு உள்ளூர் வியாபாரிகளே முக்கிய காரணமாக உள்ளனர். எனவே இலவம் பஞ்சு விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு கிலோ ரூ.100 என அரசு விலை நிர்ணயம் செய்து காதி கிராப்ட் மூலம் விவசாயிகளிடம் கொ ள்முதல் செய்யவேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்க ளில் பஞ்சு இருப்பு வைக்க வசதியாக குடோன்கள் கட்டிக் கொடுக்க வேண்டும், உள்ளூர் வியாபாரிகளை அழைத்து அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கீழ் பஞ்சு கொள்முதல் செய்ய க்கூடாது என வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்களை விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அடுத்த கூட்ட த்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.