உள்ளூர் செய்திகள்

மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2022-06-11 09:23 GMT   |   Update On 2022-06-11 09:23 GMT
  • மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர்.
  • 3 பவுன் தங்க நகையுடன் தப்பி சென்றனர்

கோவை,

கோவை சரவணம்பட்டி அம்மன் நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 29). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் விளாங்குறிஞ்சி-சரவணம்பட்டி ரோட்டில் சென்றார்.

அப்போது விளாங்குறிஞ்சி அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென விஜயலட்சுமியின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்தனர்.

இதனால் அவர் நிலை தடுமாறி மொபட்டில் இருந்து கிழே விழுந்தார்.இதனைகண்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் அவர்கள் 3 பவுன் தங்க நகையுடன் ேமாட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பின்னர் பலத்த காயம் அடைந்த விஜயலட்சுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து விஜயலட்சுமி கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News