உள்ளூர் செய்திகள்

தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை

Published On 2023-01-26 09:29 GMT   |   Update On 2023-01-26 09:29 GMT
  • தொழிலாளி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது
  • மதிவாணன் வேலைக்காக வெளியில் சென்று விட்டார்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பார்வதிநகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல்.

இவருடைய மகன் மதிவாணன்.

கூலி தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வீட்டின் உள்ளே சென்ற பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தது.

பீரோவில் இருந்த 7½ பவுன் நகைகளையும் காணவில்லை.

வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.

திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மதிவாணன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News