உள்ளூர் செய்திகள்
ஊட்டி ராமகிருஷ்ணா பள்ளியில் சுதந்திரதினவிழா
- பள்ளி முதல்வர் ரங்கநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
- விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா ஆலோசனைப்படி அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
ஊட்டி
ஊட்டி நஞ்சநாடு, கப்பத்தொரையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் 77வது சுதந்திரதின விழா நடந்தது. அப்போது பள்ளி முதல்வர் ரங்கநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவ,மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ராமகிருஷ்ணா பள்ளியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பாடவேளை உருவாக்கி, அதன்மூலம் மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, பொது அறிவு, கட்டுரை, ஓவியம் மற்றும் கைத்தொழில் ஆகியவை கற்று தரப்படுகி ன்றன. இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்க ளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா ஆலோசனைப்படி அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.