உள்ளூர் செய்திகள்

சேத்தியாத்ேதாப்பு பகுதியில் தொடர் மழை: 500 ஏக்கர் நெற் பயிர் தண்ணீரில் மூழ்கியது

Published On 2022-11-04 12:57 IST   |   Update On 2022-11-04 12:57:00 IST
  • கனமழை யின் காரணமாக வயல்க ளில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லாமல் வயல்களிலேயே தேங்கி பயிர்கள் அழுகும் நிலைஏற்பட்டுள்ளது.
  • ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை செலவுகள் செய்துள்ளோம்.

கடலூர்:

வடகிழக்கு பருவ மழை தற்போது தமிழகத்தில் பெய்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் மழை பரவலாக மழைபெய்து வருகிறது.குறிப்பாக கடலோர பகுதியில் மழை வெளுத்த வாங்கி வருகிறது. சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பரதூர் ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கனமழை யின் காரணமாக வயல்க ளில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லாமல் வயல்களிலேயே தேங்கி பயிர்கள் அழுகும் நிலைஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை செலவுகள் செய்துள்ளோம். தற்போது பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படும். விளை நிலங்களில் மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாக பாசன வாய்க்காலை தூர்வாரி பராமரிக்காத காரணத்தாலும் மெத்தன போக்காலும் அதிகளவு மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை மதிப்பீடு செய்து உரிய இழப்பீடுவழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News