உள்ளூர் செய்திகள்

பேரிகையில் மத நல்லிணக்கத்துடன் நடந்த விநாயகர் ஊர்வலம்

Published On 2022-09-03 14:21 IST   |   Update On 2022-09-03 14:21:00 IST
  • 20- க்கும் மேற்பட்ட சிலைகளை கரைத்தனர்.
  • முஸ்லிம்களும், இந்துக்களும் இணைந்து கொண்டாடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

சூளகிரி,

சூளகிரி தாலுகா பேரிகை சுற்றுவட்டாரத்தில் 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டு நேற்று 20- க்கும் மேற்பட்ட சிலைகளை கரைத்தனர்.

பேரிகை பகுதியில் பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது முஸ்லிம், இந்துக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்புடன் விழா நடைபெறுவது வழக்கம்.ஆனால் நேற்று பேரிகை பஜார் பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை முஸ்லிம்களும், இந்துக்களும் இணைந்து கொண்டாடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த மதநல்லிணக்கம் தொடரவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News