உள்ளூர் செய்திகள்

பென்னாகரத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Published On 2022-10-31 15:06 IST   |   Update On 2022-10-31 15:06:00 IST
  • பென்னாகரம் தனியார் மண்டபத்தில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • இதில் 15 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் சார்பில் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா மகளிர் திட்டத்தின் கீழ் பென்னாகரம் தனியார் மண்டபத்தில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் 15 நிறுவனங்கள் கலந்து கொண்டன. பென்னாகரம் ஒன்றியத்தைச் சார்ந்த சுற்றுவட்டார பகுதியில் இருந்து 202 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 66 நபர்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு மாவட்ட திட்ட இயக்குனர் பாபு பயிற்சி ஆணைகளை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியாக ராமன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News