உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரிக்குள் சுற்றிய கரடி

Published On 2022-12-24 14:47 IST   |   Update On 2022-12-24 14:47:00 IST
  • நோயாளிகள் கூச்சலிட்டதால் வனப்பகுதிக்குள் சென்றது.
  • மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை பிரிவு பகுதியில் இரவு நேரத்தில் வெளியே இருந்த நாய்கள் குரைத்தபடியே இருந்தன.

அப்போது நோயாளிகள் வெளியே வந்து பார்த்தபோது கரடி ஒன்று ஒய்யாரமாக மருத்துவமனைக்குள் நடமாடி கொண்டிருந்தது.இதை பார்த்ததும் பொதுமக்களும், நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரமாக நடமாடி கொண்டிருந்த கரடி, பின்னர் நோயாளிகள் கூச்சலிட்டதால் வனப்பகுதிக்குள் சென்றது.

கடந்த சில நாட்களாக கோத்தகிரி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் கரடிகள், நடமாடி வருவதால் வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News