உள்ளூர் செய்திகள்

கிச்சிபாளையத்தில்கரகாட்ட பெண் கலைஞர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-05-08 07:28 GMT   |   Update On 2023-05-08 07:28 GMT
  • மணிமேகலை (வயது 28). கரகாட்டம் ஆடும் கலைஞரான இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டது.
  • இதனால் கரகாட்டத்திற்கு சென்று ஆட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

சேலம்:

சேலம் கிச்சிபாளையம் சுண்ணாம்பு சூலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மணிமேகலை (வயது 28). கரகாட்டம் ஆடும் கலைஞரான இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கரகாட்டத்திற்கு சென்று ஆட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த மணிமேகலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீஸ் சார் மணிமேகலையின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News